Pages

Saturday, May 25, 2013

பிரபல பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை சென்னையில் காலமானார்.

இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார் ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 91.

தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார்.

1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார்.

சர்வதேச திரைஉலகில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்!

சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமான (Shanghai International Film Festival இல் கனடா, ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், புறுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Ciné Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவு செய்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.

புலம்பெயர் தேசங்களில் கிடைக்கின்ற வளங்களையும் வாய்ப்புக்களையும் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டும் ஈழத்தமிழ் இளங்கலைளுர்களின் முயற்சிகளில் ஒன்றாக இவைகள அமைந்துள்ளன.

Monday, May 20, 2013

தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் : மே-18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வில் கனேடிய தமிழ் எம்பி. ராதிகா சிற்சபைஈசன்!

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ்மக்களின் சுதந்திர போராட்டத்துடன் கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை முதன்மையாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் மேற்கொள்ளப்பட்டிருந்த மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார்.

Sunday, May 19, 2013

தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மே18 உரை!

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் நான்காம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன் அவர்கள் தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார்.

உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

Friday, May 17, 2013

தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !

முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது.

விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குராப்பணம் செய்துவைத்தார்.

கடந்த புதன்கிழமை (15-05-2013) அன்று தொடங்கியுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதோடு பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளனர்.


Monday, May 13, 2013

முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவில் தமிழீழ சுதந்திர சாசனம் முழங்கட்டும் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்!

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான நினைவேந்தல் வாரம் உலகத்தமிழ் பரப்பெங்கும் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ள இவ்வேளை தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே-18ம் நாள் சனிக்கிழமை (18-05-2013) அமெரிக்க நியூயோர்க் நேரம்) மதியம் 12 மணிக்கு முரசறையப்பட இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.