Pages

Sunday, March 3, 2013

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துரையாடல்!

சுவிஸ் துர்கா மாநிலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து அவர்களோடு இன்று கலந்துரையாடவுள்ளனர்.

சுவிஸ் துர்கா தமிழ் கலை கலாச்சார மன்ற ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை இன்று சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன், பா.அரியநேந்திரன், மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து தமிழ் உறவுகளையும் இச்சந்திப்பில் கலந்துகொண்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கும்படி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.- See more at: http://www.tamilwin.com/show-RUmryDTXNYloz.html#sthash.1i6WPehb.dpuf